மழைக்காலத்திற்கு முன்பு, மும்பை நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மும்பை முனிசிபல் கார்போரேஷன் (பிஎம்சி) நிர்வாகம் தண்ணீரினால் பரவும் நோய்களை எதிர்பார்த்து 3500 படுக்கைகளை தனியாக ஒதுக்கி வைக்கிறது. ஏனென்றால் மழைக்காலத்தில் பயங்கரமான மலேரியா மற்றும் டெங்கு நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த தேதி வரையிலும், பல மருத்துவ மனைகளில் கொசுக்களால் பரவும் மலேரியா மற்றும் டெங்கு நோய்களால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் உச்ச கட்டத்தை அடையும் போது இந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நோய்களால் அதிகம் பாதிப்படையப்படைப் போகிறவர் யார்?
குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மழைக்காலங்களில் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் இந்த மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்கு அதிகம் ஆளாகக்கூடும். இதைத் தவிர ஆரோக்கியம் இல்லத வாழ்க்கை முறையை மேற்கொண்டவர்கள் மற்றும் மோசமான பழக்கங்களும், சுகாதாரமும் உள்ளவர்களுக்கு மேலேரியா மற்றும் டெங்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மலேரியா
காரணம்:
மிக அடிப்படையான மற்றும் பொதுவான காரணம் மேலேரியா ஒட்டுண்ணிக் கிருமி ஒருத்தரிடமிருந்து இன்னொருத்தருக்கு கொசுக்கடியினால் பரவுவதுதான்.
மலேரியாவின் வகைகள்:
ஃபால்சிபரும் மற்றும் விவேக்ஸ்
இரண்டாவது வகை மிகவும் அபாயகரமானது, நோயாளிக்கு முறையான மற்றும் தரமான சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழப்பு ஏற்படக்கூடும். முதல் வகை அதிக பொதுவானதாகும் இதை குறைவான காலத்திற்குள் குணப்படுத்தி விடலாம்.
மலேரியாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
டெங்கு
காரணம்:
டெங்கு நோய் ஏடெஸ் கொசுக்களால் பரவுகிறது. இது ஒரு வாரத்திரு அதிகமாக தேங்கி நிற்கும் தண்ணீர் ஆதாரங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. பொதுவாக கட்டுமான இடங்கள், மேல் நிலைத் தண்ணீர் தொட்டிகள், நீச்சல் குளங்கள், பூந்தொட்டிகள் மற்றும் வீணாக கிடைக்கும் பொருள்களில் தேங்கி இருக்கும் தண்ணீர்.
மழைக்காலம் முடிந்தால் கொசுக்களால் தொற்றும் நோய்கள் போய்விடுவதில்லை என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. வானிலை முன்னேற்றமடைந்த்தும், ஏடெஸ் கொசுக்கள் மிக வெப்பமான மற்றும் ஈரப்பதமுள்ள நிலைகளில் செயல்படுகின்றன. அதாவது 20–30 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில்
டெங்குவின் அறிகுறிகள்
இதன் அறிகுறிகள் ஃப்ளூ காய்ச்சலைப் போல இருக்கும். உடல் வெப்பம் திடீர் என்று அதிகரிக்கும். இதற்கு எலும்பை உடைக்கும் காய்ச்சல் என்று பொதுவான பெயர் உள்ளது. இதன் அறிகுறிகள் பலவாறானது. மிதமானது முதல் தீவிரமாக இருக்கும்.
தீவிரமான நோயை டெங்கு ஷாக் சின்ட்ரோம் (டிஎஸ்எஸ்) மற்றும் டெங்கு ஹேமராஜிக் ஃபீவர் (டிஎச்எஃப்) என்று சொல்கிறார்கள். இந்த இரண்டும் மிக அபாயகரமானவை. மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
அறிகுறிகள்:
இரண்டு நோய்களுக்கும் முக்கியமான வித்தியாசம் காய்ச்சலின் காலம்தான். டெங்கு காய்ச்சல் ஒரு வாரத்திற்கு ஒரே மாதிரியாக இருக்கும். மலேரியா காய்ச்சல் இரண்டு மணி நேரத்திற்கு விட்டு விட்டு வரும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த நோய்களுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களைப் பாதுகாக்க பலவிதமான குட்நைட் கொசு விரட்டிகள் உங்கள் அருகிலுள்ள மருந்துக் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கின்றன. இவை உங்களுக்கு அபாயகரமான இந்த நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
முன்னெச்சரிக்கைகள்:
இந்த மழைக் காலத்தில் உங்கள் குடும்பத்தையும், உங்களையும் டெங்கு மற்றும் மலேரியாவிலிருந்து குறைவான புகை மற்றும் நீடித்த பாதுகாப்பு, இதமான நறுமணம் கொண்ட கொசு விரட்டிகள் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை கொசுக்களிலிருந்து உடனடியான பாதுகாப்பை உறுதி செய்யும்.