கடந்த 5–6 ஆண்டுகளாக இந்தியாவில் டெங்கு அதிகரித்து வருகிறது. இந்த நோயினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பதுகிறார்கள். ஏனென்றால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது மட்டுமின்றி, டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் பகலில்தான் கடிக்கின்றன. இந்த நேரத்தில் பெரும்பாலும் பெரிவர்கள் (அலுவலகத்தில் அல்லது வீட்டில் ) உள்ளே இருப்பார்கள், குழந்தைகள் பள்ளிக்கூடத்திலோ, விளையாடிக்கொண்டோ, பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டோ இருப்பார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்த உடன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு மாலை நேரத்தில் விளையாடச் சென்று விடுவார்கள்.
எனவே டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களை, குறிப்பாக குழைந்தைகளிடையே எவ்வாறு தடுப்பது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
டெங்குவை தடுப்பது, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, டெங்கு பற்றி நீங்கள் அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு முன்பு நாங்கள் குழந்தைகளிடையே டெங்குவை தடுக்கும் 5 வழிகள் பற்றிய கட்டுறையை வெளியிட்டிருந்தோம். அதை படித்து தெரிந்து நன்கு கொள்ளுங்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் டெங்குவைத் தடுப்பதற்கு நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சிலவற்றை பின்னே கொடுத்துள்ளோம்.
குழந்தைகளை டெங்கு காய்ச்சல் எவ்வாறு பாதிக்கிறது?
சிலருக்கு டெங்கு வைரல் காய்ச்சல் எந்த அடிகுறிகளும் சொல்லாமல் தொற்றிக்கொள்கிறது. சிறு குழந்தைகள் மற்றும் சிறுவ சிறுமிகளிடையே இதன் அறிகுறிகள் மிக மிதமாக இருக்கும்.
சிறு குழந்தைகள் மற்றும் சிறுவ சிறுமியர்களிடையே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.
பெரிய குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளில் அடங்கியவை.
டெங்கு தொற்றுள்ள ஏடெஸ் கொசு கடித்த பிறகு பெரும்பாலும் 8–10 நாட்களில் இந்த அறிகுறிகள் தோன்றும். இந்தகால கட்டத்தில் குழந்தைகளுக்கு பின் வரும் அறிகுறிகள் ஏற்படக்கூடும்
உங்கள் குழந்தைக்கு டெங்கு இருப்பதாக சந்தேகித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உடனே குழந்தை நல மருத்துவரிடமோ அல்லது பொது மருத்துவரிடமோ காட்ட வேண்டும். பெரும்பாலான டாக்டர்கள் டெங்கு வைரஸ் இருக்கிறதா என்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள். பொதுவாக டெங்குவிற்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை என்பதால், அது தானாகவே போய்விடும். ஆனால் தீவிர நிலைகளில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படலாம்.
பின் வரும் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவும்: